search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் அரசு திருமகள் ஆலை கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை
    X

    குடியாத்தம் அரசு திருமகள் ஆலை கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை

    • வருகிற 12-ந் தேதி நடக்கிறது
    • 30-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி வரை 3 கட்டங்களாக நடத்தப்பட்டது

    குடியாத்தம்:

    குடியாத்தம் அரசு திருமகள் ஆலை கல்லூரி முதல்வர் கோ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    அரசு திருமகள் ஆலை கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கை இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த மே மாதம் 30-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி வரை 3 கட்டங்களாக நடத்தப்பட்டது.

    இதில் கணிதம், பொருளியல், வரலாறு, தமிழ், ஆங்கிலம், இயற்பியல், தாவரவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்காத அனைத்து பிரிவு மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்கும் பொருட்டு கல்லூரியிலேயே வருகிற 10 மற்றும் 11-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நேரடியாக விண்ணப்பம் வழங்கப்படும்.நேரடியாக விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 12-ந் தேதி சேர்க்கை நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×