search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    142 மையங்களில் நாளை குரூப்-4 தேர்வு
    X

    142 மையங்களில் நாளை குரூப்-4 தேர்வு

    • காலை 9 மணிக்கு பிறகு வந்தால் அனுமதி இல்லை
    • முகக்கவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தல்

    வேலூர்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வேலூர் மாவட்டத்தில் குரூப்-4 பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நாளை காலை நடைபெற உள்ளது.

    வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி. குப்பம், காட்பாடி மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய 6 இடங்களில் தேர்வமைப்பாளர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வேலூர் மையத்தில் 65, அணைக்கட்டு 13, குடியாத்தம் 27, கே.வி.குப்பம் 8, காட்பாடி 25, பேர்ணாம்பட்டு 4 தேர்வு கூடங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

    வேலூர் மாவட்டம் முழுவதுமாக 41,307 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

    இது தவிர, ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் பாதுகாப்பிற்கு ஒரு போலீஸ் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்திற்கு பைகள், புத்தகங்கள் மற்றும் செல்போன் கால்குலேட்டர், பேஜர், போன்ற மின்னணு சாதனங்களை கண்டிப்பாக எடுத்துவரக் கூடாது.

    கொரோனா காலமாக இருப்பதால் கொரோனா விதிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும், முகக்கவசம் கட்டாயம் அணியுமாறும், சிறிய அளவிலான கை சுத்தம் செய்யும் திரவத்தினை எடுத்து செல்லுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

    தேர்வர்கள் 8.30 மணி முதல் 9 மணிக்குள்ளாக தேர்வுக் கூடத்திற்குள் சென்றிருக்க வேண்டும். 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வுக் கூடங்களிலும் விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இன்றி தேர்வு எழுத அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×