search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள்
    X

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். அருகில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா.

    மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள்

    • மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட அளவிலான கலைத்தி ருவிழா போட்டிகள் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    நிறைவு விழாவிற்கு வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி வரவேற்று பேசினார்.

    வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர், சுஜாதா ஆனந்தகுமார், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் எஸ்.மகாலிங்கம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை, நெல்லூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எஸ்.திருநாவுக்கரசு ஆசிரியர் தமிழ்திருமால், ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், தலைமையாசிரியர்கள் எ.ஜெயதேவரெட்டி, சண்முகம், எஸ்.எஸ்.சிவவடிவு, கோ.பழனி, எம்.மகேந்திரன், எஸ்.சுரேஷ், கே.கார்த்திகேயன், எம்.சினேகலதா, பேபி, லதா சங்கர், சித்தார்த்தன், உதவித்தலைமையாசிரியர் குமரன், தேசிய மாணவர் படை முதன்மை அலுவலர் க.ராஜா, பாரத சாரண சாரணீய மாவட்ட செயலாளர் எ.சிவக்குமார் பள்ளித்துணை ஆய்வாளர்கள் ஆ.மணிவாசகம், ஷைனி வட்டார மேற்பார்வையாளர்கள், தலைமையாரியர்கள், இருபால் ஆசிரிய பெருமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×