search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
    X

    புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி மீனூர் மலை வெங்கடேச பெருமாள் கோவில், பிச்சனூர் பத்மாவதி சமேத ஸ்ரீ வெங்கடேசபெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

    • புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    முதல் சனிக்கிழமை முன்னிட்டு வெங்கடேச பெருமாள் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    குடியாத்தம் அடுத்த மீனூர்மலை வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு மூலவர் ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அதேபோல் பத்மாவதி தாயார் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    குடியாத்தம் பிச்சனூர் தென்திருப்பதி ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீ பத்மாவதி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் 27 ஆம் ஆண்டு புரட்டாசி பெருவிழா நடைபெற்றது தொடர்ந்து மூலவர் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×