2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

10-க்கும் மேற்பட்ட போலீசார் வெள்ளைக்கல் மலையில் வேட்டை நடத்தினர் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
Published on

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த சிவநாதபுரம் அருகே உள்ள வெள்ளைக்கல் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 10-க்கும் மேற்ப்பட்ட போலீசார் நேற்று வெள்ளைக்கல் மலையில் சாராய வேட்டை நடத்தினார். போலீசாரை கண்டம் தப்பி ஓட முயன்றவரை, போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாராயம் காய்ச்சியதும் தெரிந்தது.

இதனையடுத்து போலீசார் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் மற்றும் வெல்லம் உள்ளிட்ட பொருட்களை கீழே கொட்டி அழித்தனர். இதனை அடுத்து போலீசார் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com