தி.மு.க பவள விழா மற்றும் முப்பெரும் விழாவுக்கு அலைகடலென திரண்டு வாருங்கள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. அழைப்புதொண்டர்கள் திரண்டு வாருங்கள்
வேலூர் மேல்மொணவூர் இலங்ைக தமிழர் குடியிருப்பில் புதிய வீடுகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன்,எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட பலர் உள்ளனர்.
வேலூர் மேல்மொணவூர் இலங்ைக தமிழர் குடியிருப்பில் புதிய வீடுகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன்,எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட பலர் உள்ளனர்.
Published on

வேலூர்:

வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்ட பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆளும் வர்க்கதினால் அடிமைபட்டுகிடந்த சமூகத்தை ஆர்ப்பரித்து வீறுகொண்டு எழுந்திட உதயமான சமூக சீர்த்திருத்த இயக்கமான அண்ணா கண்ட திராவிட முன்னேற்ற கழகம் தோன்றிய நாளில் மாநகர ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கிளை அமைப்புகளில் இருவண்ண கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடிவோம்.

தீண்டாமையினாலும், மூட பழக்கவழக்கத்தினாலும் பிற்ப்போக்குதனமாக வாழ்க்கையில் உழன்றுக்கொண்டிருந்த சமூகத்தை தனது முற்ப்போக்கு சிந்தனையால் தட்டி எழுப்பி சமத்துவ சமுதாயத்தை படைத்த சமத்துவ பெரியார் அவர்களின் 145–-வது பிறந்த நாளான வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி போற்றுவோம்.

17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் நமது வேலூர் அடுத்த பள்ளிகொண்டா டோல்கேட் அருகில் கழக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெறும் கழக பவள விழா, கழக முன்னோடி களுக்கு விருது வழங்கும் முப்பெரும் விழாவில் கழக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருது வழங்கி, விழா பேருரை ஆற்ற உள்ளார்கள்.

மேலும் இந்நிகழ்வில் கழக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

எனவே மாநில தலைமைகழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, மாநிலங்க ளவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில அணிகளின் துணை செயலாளர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் அணிகளின் நிர்வாகிகள், வட்ட, வார்டு, ஊராட்சி வார்டு கிளைக் கழக நிர்வாகிகள், கழக முன்னோ டிகள், கழக புரவலர்கள், கழக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் அலைகடலென திரண்டு பங்கேற்று விழாவினை சிறப்பித்திட வேண்டுமாய் வருக வருக என அன்போடு வரவேற்று கேட்டுக்கொள்கிறேன்.

வேலூரில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.மணி அளவில் நடைபெற உள்ள கழக பவள விழா, கழக முன்னோடிகளுக்கு விருது வழங்கும் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு விழா பேருரை ஆற்ற நாளை சனிக்கிழமை அன்று இரவு 7மணி அளவில் காட்பாடி ெரயில் நிலையத்திற்கு வருகை தரும் கழக தலைவர், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு. க ஸ்டாலினுக்கு கழக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

முதல்-அமைச்சரை உள்ளன்போடும், உற்சாகத்தோடும் வரவேற்றிட அனைவரையும் வருக, வருக என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com