search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் மது விற்ற 33 பேர் கைது
    X

    வேலூர் மாவட்டத்தில் மது விற்ற 33 பேர் கைது

    • 441 மது பாட்டில்கள் பறிமுதல்
    • போலீசார் சோதனையில் சிக்கினர்

    வேலூர்:

    வேலூரில் நேற்று தொழிலாளர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் தனியார் பார்களில் மது விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    தடையை மீறி மாவட்டம் முழுவதும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் மாவட்ட முழுவதும் போலீசார் ஆங்காங்கே சோதனை நடத்தினர்.

    தடையை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து 441 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×