search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடுத்த தலைமுறைக்கு வேளாண்மையை கொண்டு செல்ல வேண்டும்
    X

    அடுத்த தலைமுறைக்கு வேளாண்மையை கொண்டு செல்ல வேண்டும்

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு
    • பாரம்பரிய விதை கண்காட்சி நடந்தது

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அரசு ஏந்திர கலப்பை பணிமனையில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக பாரம்பரிய பயிர்கள் மற்றும் பாரம்பரிய விவசாயம் தொடர்பான கண்காட்சி நடைபெற்றது. அதில் நம்முடைய பகுதியில் விளையக்கூடிய பல்வேறு வகையான பயிர்கள் மற்றும் நம்முடைய பகுதியில் என்னென்ன வகையான முறைகளை கையாண்டு நாம் வேளாண்மை துறையில் செய்து வருகின்றோம்.

    அந்த முறைகளுக்கு தேவையான கருவிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் பெருமக்கள் அறிய ரக பயிர்களை கொண்டு வந்து காட்சிப்படுத்தி உள்ளனர். நம்முடைய வாழ்க்கை முறை என்பது தட்பவெட்பம் போன்ற பல்வேறு பிரிவுகளால் அமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பகுதியை பொறுத்தவரை வெப்பமண்டலத்தில் அமைந்திருக்கக்கூடிய பகுதி.

    இந்த பகுதியில் கோடைகாலத்தில் உச்சபட்ச வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் ஆகும். குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பம் 14 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. தற்பொழுது நாம் குளிர்காலத்தில் மையப் பகுதியில் உள்ளோம். இந்த பனிக்காலத்தில் நோய் தாக்குதல் என்பது சற்று குறைவாகவே இருக்கும். தை மாதம் என்பது நெல், சோளம், சிறுதானியங்களை அறுவடை செய்ய உகந்த காலம்.

    வேளாண்மை என்பது இன்றியமையாத ஒரு தொழில் இந்த தொழிலை நாம் வாழ்க்கை முறையாக பின்பற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×