search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவ - மாணவிகளை பாட்டு பாடி உற்சாகபடுத்திய நடிகை ஆண்ட்ரியா
    X

    வி.ஐ.டி. ரிவேரா கலைவிழாவில் நடிகை ஆண்ட்ரியா மாணவ, மாணவிகளை பாட்டு பாடி உற்சாகபடுத்திய காட்சி.

    மாணவ - மாணவிகளை பாட்டு பாடி உற்சாகபடுத்திய நடிகை ஆண்ட்ரியா

    • வி.ஐ.டி. ரிவேரா கலைவிழா நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வி.ஐ.டி.யில் ரிவேரா' 23 என்ற சர்வதேச கலைத் திருவிழா 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ரிவேரா' 23 சர்வதேச கலை திருவிழா 2-வது நாளான நேற்று நாளில் இன்பியூசன் எனும் சர்வதேச மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

    சாகிதி எனும் தெலுங்கு பாட்டுக்கு பாட்டு நிகழ்வும், சைலன்ட் டிஸ்கோ எனும் நிகழ்வில் மாணவ, மாணவிகள் ஹெட்போன் அணிந்து கொண்டு அதில் கேட்கும் இசைக்கேற்ப நடனம் ஆடினார்கள்.

    மேற்கத்திய இசையை மையப்படுத்தி 'ரெசோனன்ஸ்' நிகழ்வும், மாணவ, மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து திரைப்பட பிரபல நடிகையும், பின்னணி பாடகிமான ஆண்ட்ரியாவின் இசை கச்சேரி நடைபெற்றது.

    இசைக்கச்சேரியில் ஆண்ட்ரியா தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படப் பாடல்களை பாடி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார். மேலும் ஜாவித் அலி குழுவினரின் இசை கச்சேரியும் நடைபெற்றது. இன்று மாலை நாளயக் குழுவின் இசை கச்சேரி நடைபெற உள்ளது.

    அதேபோல் மாலை ப்ரிஸ்க் பேக்டர் என்ற மாபெரும் நடனப் போட்டியும் நடைபெற உள்ளது. இன்று காலை 9 மணிக்கு ஐக்கியா என்ற நிகழ்வு நடைபெறுகிறது.

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார பண்பாட்டை விளக்கும் வகையில் இந்த நிகழ்வு இருக்கும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×