search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாராயம் விற்ற வாலிபர் கைது
    X

    கோப்புப்படம்



    சாராயம் விற்ற வாலிபர் கைது

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • 104 லிட்டர் சாராயத்தை பறிமுதல்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த ஓங்கபாடி ஆற்றங்கரையில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள ஆற்றங்கரை படுக்கையில் திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் விற்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

    அதில் அவர் வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்த அஜித் (வயது 23), என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 104 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×