search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர்- பெங்களூரு நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்
    X

    வேலூர்- பெங்களூரு நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்

    • போக்குவரத்து நெரிசல்
    • தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்

    வேலூர்:

    வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்தவர் மாதய்யன். இவர் தனது காரை வேலூரில் உள்ள மெக்கானிக் கடைக்கு பழுது பார்க்க ஓட்டி சென்றார்.

    அப்போது கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வேலூர்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென காரில் புகை வந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சடைந்த மாதய்யன் காரில் இருந்து உடனே வெளியே இறங்கி ஓடி வந்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கார் முழுவதும் தீ பரவியதால், அந்தப் பகுதியில் கரும் புகை மண்டலம் சூழ்ந்தது.

    இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள், தீப்பிடித்து எரிந்த கார் வெடுத்து விடுமோ? என பயந்து தூரமாகவே வாகனங்களை நிறுத்தி விட்டனர். சுமார் 45 நிமிடங்கள் கார் தீப்பற்றி எரிந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சென்று, போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் தீயில் கருகி நாசமானது.

    வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால், சத்துவாச்சாரியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    45 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்ததால், சிலர் சர்வீஸ் சாலைகளில் இறங்கி எதிரும், புதிருமாக சென்றனர்.

    வாகன போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×