என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேலூரில் நாளை நடைபெற உள்ள விநாயகர் சிலை ஊர்வலத்தில் 1,700 போலீசார் பாதுகாப்பு
- பறக்கும் கேமரா மூலமும் கண்காணிப்பு
- அரசின் வழிகாட்டுதலை கடைபிடிக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள், பொது மக்கள் மற்றும் தனி நபர்கள் என மொத்தம் 976 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
விநாயகர் ஊர்வலம்
இதற்கு பாதுகாப்பு பணியில் மாவட்டத்தில் மொத்தம் 1500 போலீஸ் மற்றும் கூடுதலாக 261 பயிற்சி போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கவும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதையில் 3 பறக்கும் மேராக்கள் மூலம் கண்காணிக்கவும், மொபைல் கமாண்ட் கன்ட்ரோல் யூனிட் வாகனம் ஒன்றும் ஊர்வலத்தின் போது கண்காணிப்பு பணியில் புதிதாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கேமரா மூலம் கண்காணிப்பு
அந்த வாகனத்தில் 360 டிகிரி கோணத்தில் சுழன்று படம் பிடிக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களை சிசிடிவி மேராக்கள் மற்றும் டிஜிட்டல் மேப்பிங் சிஸ்டம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு இடையூறு செய்பவர்கள் குறிப்பாக பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 62 பேரை குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என பிரமாண பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.
அனைத்து அமைப்பாளர்கள் மற்றும் சிலை ஏற்பாட்டாளர்கள் அரசின் பல்வேறு வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்