search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளைகள் முட்டி 15 பேர் காயம்
    X

    காளைகள் முட்டி 15 பேர் காயம்

    • அணைக்கட்டு கீழ்கொத்தூரில் மாடு விடும் விழா நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தில் 62 ம் ஆண்டு எருது விடும் விழா க்நடைப்பெற்றது.

    வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய கவுன்சிலர் கணபதி, ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் மற்றும் போலீசார் ஆகியோர் முன்னிலையில் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு காளை விடும் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பல்வேறு பகுதிகளி லிருந்து 190 காளைகள் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக காளைகள் வெளி யேற்றப்பட்டது.

    விழாவை பார்க்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். குறுகிய காலத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைய வேகமாக ஓடிய காளைகளின் எதிரே நின்ற வீரர்களை தூக்கி வீசியதில் 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தீபிகா தலைமை யிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    வேகமாக ஓட முயன்ற 2 காளைகள் ஓடும் பாதையில் நிலை தடுமாறி வழுக்கி விழுந்தன. இதனை உடனடியாக அந்த காளைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வெற்றி பெற்ற காளைகளுக்கு மொத்தம் 52 பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 100 க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர்.

    Next Story
    ×