search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிப்பர் லாரி மோதி காய்கறி  வியாபாரி சாவு
    X

    டிப்பர் லாரி மோதி காய்கறி வியாபாரி சாவு

    • மோட்டார் சைக்கிளில் வந்தபோது அந்த வழியாக டிப்பர் லாரி ஒன்று அவர் மீது வேகமாக வந்து மோதியது.
    • லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காடுசெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது27). இவர் மோட்டார் சைக்கிளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

    சம்பவத்தன்று தருமபுரி-ஓசூர் சாலையில் சின்னதடங்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது அந்த வழியாக டிப்பர் லாரி ஒன்று அவர் மீது வேகமாக வந்து மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பன்னீர் செல்வம் படுகாய–மடைந்தார். அப்போது லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே ஓடிவந்து காயமடைந்த பன்னீர்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்ைட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர் பன்னீர் செல்வம் வரும்வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி சாய்சித்ரா (24) கொடுத்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×