search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருமுன் காப்போம் பொது மருத்துவ முகாம்
    X

    கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்.

    வருமுன் காப்போம் பொது மருத்துவ முகாம்

    • முகாமில் ஸ்கேனிங் இ.ஜி.சி., கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை, புற்றுநோய் கண்டறிதல், சுகர் மற்றும்உயர் ரத்தழுத்தம், கண் சிகிச்சை, சித்தா, ஹோமியாபதி, யுனானி உள்ளிட்டவைகள் மூலம் நோய்களைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்தனர்.
    • இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்அன்பர சன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, சேர்மன் காமாட்சி மூர்த்திஆகியோர் முன்னிலை வகித்த னர். சுகாதார மேற்பார்வை யாளர் பாஸ்கர் வரவே ற்றார். ராஜ்குமார் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் ஸ்கேனிங் இ.ஜி.சி., கர்ப்பிணி பெண்களு க்கான பரிசோதனை, புற்றுநோய் கண்டறிதல், சுகர் மற்றும்உயர் ரத்தழுத்தம், கண் சிகிச்சை, சித்தா, ஹோமியாபதி, யுனானி உள்ளிட்டவைகள் மூலம் நோய்களைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவர் பிரபா, மருத்துவர்கள் கிளின்டன், செந்தில், சுகாதார ஆய்வாளர் மலர்கொடி, தி.மு.க ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலர் ரஜினி நன்றி கூறினார்.

    Next Story
    ×