என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாதாள செம்பு முருகன் கோவிலில் வளர்பிறை சஷ்டி வழிபாடு
- வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு அதிகாலை 16 வகையான அபிஷேக பொருட்கள் மற்றும் மூலிகை விபூதி கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
- தொடர்ந்து சிறப்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அடுத்த ராமலிங்கம்பட்டி போகர் நகரில் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட முருகனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
அதன்படி வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு அதிகாலை 16 வகையான அபிஷேக பொருட்கள் மற்றும் மூலிகை விபூதி கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திண்டுக்கல், கரூர், தாராபுரம், திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மூலிகை விபூதி பிரசாதமாக கோவில் ஆதீனம் அறிவாதினம் வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்