search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே பாத்திர வியாபாரி மாரடைப்பால் மரணம்
    X

    பண்ருட்டி அருகே பாத்திர வியாபாரி மாரடைப்பால் மரணம்

    மணம்தவிழ்ந்தபுத்தூர் காலனி அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 35), இவர் தற்போது பண்ருட்டி அடுத்த திருவதிகை வள்ளி கந்தன் நகரில் தங்கி இருந்து தனது மூன்று சக்கர ஆட்டோவில் பண்ருட்டி, விழுப்புரம் பகுதிகளில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் திருவதிகையில் இருந்து அரசூர் ரோடு வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது மணம்தவிழ்ந்தபுத்தூர் காலனி அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஓடும் வாகனத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    Next Story
    ×