search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருவம் தவறிய மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
    X

    உப்பு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.

    பருவம் தவறிய மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

    • விட்டு, விட்டு மழை பெய்ததால் உப்பு உற்பத்தி குறைந்துள்ளது.
    • தற்போது மூட்டை கட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினத்தில், இந்த ஆண்டு உப்பு உற்பத்தி காலதாமதமாக மார்ச் மாதத்தில் தொடங்கியது.

    இந்த முறையும் விட்டு, விட்டு மழை பெய்ததால் உப்பு உற்பத்தி குறைந்துள்ளது என தொழிலாளர்கள் கூறு கின்றனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில், முன்பெல்லாம் லாரி, லாரியாக உப்பு குவிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மூட்டை கட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    பருவம் தவறி மழை பெய்வதால் உப்பு உற்பத்தி சரிவர நடைபெறாமல் பாதிக்கப்படுகிறது.

    இதனால் தொழிலாளர்களின் வாழ்வா தாரம் கேள்விக்குறியாகிறது என்றனர்.

    மேலும், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×