search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்கலைக்கழக அளவிலான பளுதூக்கும் போட்டி- திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி அணி முதலிடம்
    X

    பல்கலைக்கழக அளவிலான பளுதூக்கும் போட்டி- திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி அணி முதலிடம்

    • பளுதூக்கும் போட்டியில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டிகள், பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஆண்கள் பிரிவில் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி அணி முதலிடத்தையும், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி அணி 2-வது இடத்தையும், கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி அணி 3-வது இடத்தையும், கோவில்பட்டி கே.ஆர். கலை அறிவியல் கல்லூரி அணி 4-வது இடத்தையும் பிடித்தது.

    பெண்கள் பிரிவில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி அணி முதலிடத்தையும், தெற்கு கள்ளிக்குளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி அணி 2-வது இடத்தையும், தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி அணி 3-வது இடத்தையும், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி அணி 4-வது இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×