பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம்போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்
அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை படத்தில் காணலாம்.
அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே கொக்குபாளையத்தில் ஜெயபால் தென்னந்தோப்பு அருகே கெடிலம் ஆற்றுக்குசெல்லும் வழியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம்தெரியாதஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும்புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். இவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com