search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி என்.ஆர்.,ஐ.ஏ.எஸ். அகாடமியில் யு.பி.எஸ்.சி. மெயின் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்-நாளை தொடங்குகிறது
    X

    திருச்சி என்.ஆர்.,ஐ.ஏ.எஸ். அகாடமியில் யு.பி.எஸ்.சி. மெயின் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்-நாளை தொடங்குகிறது

    • கடந்த 19 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்த கல்வி மையத்தில் இதுவரை 21 ஆயிரம் பேர் தேர்வு எழுதி வெற்றி பெற்று நாட்டின் பல்வேறு பகுதி–களில் அதிகாரிகளாக, அலுவலராக பணியாற்றி வருகின்றனர்.
    • தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வகுப்புகளைப் பொருத்தமட்டில் நேரடி வகுப்புகளும், ஆன்லைன் வகுப்புகளும் உள்ளன.

    திருச்சி:

    திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர்., ஐ.ஏ.எஸ். அகாடமி கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர.எஸ்., யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., ரயில்வே உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    கடந்த 19 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்த கல்வி மையத்தில் இதுவரை 21 ஆயிரம் பேர் தேர்வு எழுதி வெற்றி பெற்று நாட்டின் பல்வேறு பகுதி–களில் அதிகாரிகளாக, அலுவலராக பணியாற்றி வருகின்றனர்.

    இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகிய யு.பி.எஸ்.சி.மெயின் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது.

    பயிற்சி வகுப்பு தொடர்பாக என்.ஆர்.,ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் ஆர். விஜயாலயன் கூறும்போது,

    வாரத்தில் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக சிறந்த கல்வியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வகுப்புகளைப் பொருத்தமட்டில் நேரடி வகுப்புகளும், ஆன்லைன் வகுப்புகளும் உள்ளன.

    தமிழில் மெயின் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    யுபிஎஸ்சி தேர்வுகளுக்கென தனியாக பயிற்சி வகுப்பு நடத்தப்படும். ஆண்,பெண் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதிகள் கல்வி மைய வளாகத்தில் அமைந்துள்ளன என்றார்.

    Next Story
    ×