என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நந்தவனம் பவுண்டேஷன் சார்பில் - சாதனை மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா
- நந்தவனம் பவுண்டேசன் ஆண்டு தோறும் சாதனை மாணவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.
- விழாவில் தமிழக முன்னாள் அமைச்சர் என்.நல்லுசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டு பேசினார்
திருச்சி
நந்தவனம் பவுண்டேசன் ஆண்டு தோறும் சாதனை மாணவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. 2023-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா திருச்சியில் நடந்தது. நிகழ்வில் பொறிஞர் ப. நரசிம்மன் எழுதிய நற்சுவைக் கவிதைகள், நம்மை மேம்படுத்தும் நற்பண்புகள் ஆகிய 2 நூல்கள் வெளியிடப்பட்டது.
விழாவுக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 ன் 2024- 25ம் ஆண்டுக்கான மீடியா பப்ளிசிட்டி ஆபிஸரும் இனிய நந்தவனம் கவுரவ ஆலோசகரமான கே. சீனிவாசன் தலைமை தாங்கினார். நந்தவனம் பவுண்டேசன் தலைவர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
விழாவில் தமிழக முன்னாள் அமைச்சர் என்.நல்லுசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டு பேசினார். அப்போது, இது போன்ற விருது வழங்கும் விழா எதிர்காலத்தில் மாணவர்கள் இன்னும் நிறைய சாதிக்க உந்து கோலாக இருக்கும் என்றார்.
திருச்சி பாட்சா பிரியாணி உரிமையாளர் அபுபக்கர் சித்திக், ஜெர்மனி தமிழருவி வானொலி நிறுவனர் நைனை விஜயன், சசிகலா விஜயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கவிஞர் பா.சேதுமாதவன், பேராசிரியர் ஜா.சலேத் இருவரும் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார். பல துறைகளில் சாதனை புரிந்த பள்ளி மாணவர்கள் வி. ல. ரக்ஷ்தா. (ஈரோடு) வி.ல.நந்தனராஜ் (ஈரோடு) வி.ஜெயச்செல்வன் (திருச்சி) சரக்ஷ்னா (திருச்சி) எஸ். அவினாஷ். (திருச்சி) ஆகியோருக்கு சாதனை மாணவர் விருது 2023 வழங்கப்பட்டது.
முன்னதாக நந்தவனம் மக்கள் தொடர்பாளர் பா. தனபால் வரவேற்றார். பொறிஞர் ப. நரசிம்மன் ஏற்புரை நிகழ்த்தினார், முடிவில் நித்யா கோபாலன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்