என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

குமார வயலூர் முருகன் கோவிலுக்கு புதிய வெள்ளி தேர்

- முருகன் கோவிலுக்கு புதிய வெள்ளி தேர்
- திருப்பணி குழு கூட்டத்தில் முடிவு
ராம்ஜிநகர்
திருச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற குமார வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக தற்போது கோவில் கோபுரம், உள் பிரகாரம் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்கள் தெப்பக்குளம் ஆகிய இடங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது சம்பந்தமான திருப்பணி குழு ஆலோசனை கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கோவிலுக்கு புதிதாக வெள்ளித் தேர் செய்வது, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக துலாபாரம் அமைப்பது , புதிய கொடிமரம் அமைப்பது, மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்ற பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் இணை ஆணையர் ஹரிஹரன், செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் அழகுமணி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் கொத்தட்டை ஆறுமுகம், நாச்சி குறிச்சி ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், கோவில் நிர்வாக அதிகாரி அருண் பாண்டியன் மற்றும் உபயதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
