search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லக்குடி கருப்பண்ண சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்
    X

    கல்லக்குடி கருப்பண்ண சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்

    • கல்லக்குடி கருப்பண்ண சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது
    • திரளான பக்தர்கள் தரிசனம்

    திருச்சி

    திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் பிரசித்தி பெற்ற கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த செப்டம்பர் 9-ந்தேதி பாலாலயம் செய்து புதிதாக புனரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலகணபதி பூஜை, மூன்று, நான்காம் காலை யாக பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து யாத்ரா தானம், கடம் புறப்பாடு செய்து காலை 10 மணி அளவில் ஆலயத்தின் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    இதையடுத்து ஆலயத்தில் உள்ள கள்ள மேட்டு கருப்பண்ணசாமி, மதுரை வீரன், பொன்னியம்மன், பாப்பாத்தி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சர்வ சாதகம் நந்தகுமார் முரளி வேதம் நாதா சிவாச்சியார் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மகா தீப ஆராதையுடன் காண்பிக்கப்பட்டது.

    விழாவில் டால்மியா சிமெண்ட் ஆலை துணை பொது மேலாளர் சுப்பையா, துணை செயல் இயக்குனர் மகேஷ், மேலாளர் ராதாகிருஷ்ணன், ரமேஷ்பாபு, பாலசுப்பிரமணியன் முன்னாள் தொழிற்சங்க தலைவர் இளங்கோன் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை டால்மியா சிமெண்ட் நிர்வாகம், சுரங்க தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×