என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
- திருச்சியில் கள்ளத்தொடர்பை கண்டித்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்துள்ளார்
- எரிந்த உடலை பாகங்களை ஆற்றில் வீசிய கொடூரம்
மணச்சநல்லூர்
சமயபுரம் அருகே மாகாளிக்குடி காலனி தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 30 ). பூக்கடை வைத்து நடத்தி வந்தார்.இவருக்கு திருமணமாகி வினோதினி (27) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி பிரபு திடீரென மாயமானார்.பின்னர் வினோதினி கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இதற்கிடையே பிரபு உறவினர்கள், வினோதினிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்புள்ளது என போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து உஷாரான துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம் மற்றும் போலீசார் வினோதினியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.இதில் சமயபுரம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாரதி (23) என்பவர் உடன் வினோதினிக்கு கள்ளத்தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கள்ளத்தொடர்பு விவகாரத்தை பிரபு கண்டித்ததால் ஆத்திரமடைந்த வினோதினி கள்ளக்காதலன் பாரதியுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, பாரதியின் நண்பர்கள் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த ரூபன் பாபு (26) ஸ்ரீவான்( 18) திவாகர் (18 )ஆகியோர் உதவியுடன் உடலை திருச்சி மன்னார்புரம் பகுதியில் எரித்ததும் தெரிய வந்தது.மேலும் இந்த சம்பவத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் மீதம் கிடந்த உடல் பாகங்களை காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வீசி சென்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது.
அதைத் தொடர்ந்து வினோதினி உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான வினோதினி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
எனக்கும் ஆட்டோ டிரைவர் பாரதிக்கும் கடந்த ஓராண்டாக தொடர்பு இருந்தது.நாங்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தோம். இதனை அறிந்த எனது கணவர் பிரபு என்னை கண்டித்தார். அதைத் தொடர்ந்து நானும் பாரதியும் கணவரை கொலை செய்ய திட்டமிட்டோம்.அதன்படி கடந்த 4-ம் தேதி மது போதையில் இருந்த பிரபுவுக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தோம். இதில் அவர் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார்.பின்னர் தலையில் அடித்தும், கயிற்றால் கழுத்தை நெரித்தும் கொலை செய்தோம். பாரதியின் நண்பர்கள் ரூபன் பாபு, ஸ்ரீவான், திவாகர் ஆகியோர் உதவியுடன் மறுநாள் அவரது உடலை திருச்சி மன்னார்புரம் புதர் பகுதியில் எடுத்துச் சென்று தீ வைத்து எரித்தோம்.
இருப்பினும் உடல் முழுமையாக எரியவில்லை.பின்னர் போலீசுக்கு பயந்து அப்போது அங்கிருந்து சென்று விட்டோம். மறுநாள் எரியாத உடல் பாகங்களை மூட்டையில் எடுத்துக்கொண்டு கை மற்றும் தலைப்பகுதியை எடுத்துக்கொண்டு காவிரி ஆற்றிலும், கால் பாகங்களை கொள்ளிடம் ஆற்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றோம். கணவரை காணவில்லை என்று உறவினர்களிடம் நாடகம் ஆடினேன். ஆனால் போலீசார் என் செல்போனை எடுத்து அதன் மூலமாக துப்பு துலக்கி விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
வினோதினியின் கள்ளக்காதலன் பாரதி மீது ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பாரதியின் தொடை எலும்பு பகுதி கொள்ளிடம் ஆற்றில் மீட்கப்பட்டது. காவிரியில் தண்ணீர் போக்குவரத்து உள்ளதால் ஆற்றில் வீசப்பட்ட தலை மற்றும் கை பாகங்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். கள்ளத் தொடர்பை கண்டித்ததால் கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கணவரை கொலை செய்து உடல் பாகங்களை காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வீசிய கொடூர சம்பவம் சமயபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்