search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொட்டியம் அருகே ரேஷன் கடை மூட்டை தூக்கும் தொழிலாளியை கொல்ல முயற்சி-கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
    X

    தொட்டியம் அருகே ரேஷன் கடை மூட்டை தூக்கும் தொழிலாளியை கொல்ல முயற்சி-கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

    • தொட்டியம் அருகே ரேஷன் கடை மூட்டை தூக்கும் தொழிலாளியை கொல்ல முயற்சித்த 2 ேபரை போலீசார் தேடி வருகின்றனர்
    • இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கொடியம்பாளையம் கூத் தன் செட்டியார் தெரு பகுதி–யைச் சேர்ந்தவர் ராமன் (வயது 50). இவர் கொடி–யம்பா–ளையம் ரேஷன் கடையில் மூட்டை தூக்கும் தினக்கூலி தொழி–லாளி–யாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வழக் கம்போல் நேற்று மாலை வேலை முடிந்து ராமன் அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். ஆற் றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் அவரது கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பி சென்றனர்.

    இதில் அவரது கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ரத்த வெள்ளத்தில் அவர் ஆற் றங்கரையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந் தார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது மனைவி சம்பூர்ணம் கணவரை மீட்டு தொட்டியம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச் சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை முயற்சிக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. மயக்க நிலையில் இருப்ப–தால் மேற்கொண்டு புலன் விசாரணை நடத்த முடிய–வில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட் டது. ஆற்றில் குளிக்கும் போது தொழிலாளியை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்ப–டுத்தியுள்ளது.

    Next Story
    ×