கோத்தகிரி அருகே பழங்குடியின குறைதீர்ப்பு கூட்டம்- நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஆ.ராசா எம்.பி பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது
கோத்தகிரி அருகே பழங்குடியின குறைதீர்ப்பு கூட்டம்- நலத்திட்ட உதவிகள்  வழங்கும் விழா
Published on

அரவேனு,

கோத்தகிரி அருகே பழங்குடியின குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவில் ஆ.ராசா எம்.பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

முகாமில் பழங்குடியின மக்கள் தங்கள் கிராம பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம், பஸ் வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என மனு அளித்தனர்.

மனுவை பெற்று கொண்ட ஆ.ராசா எம்.பி., மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

மேலும் பழங்குடியின கிராம மக்களுக்கு தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.இதில் கலெக்டர் அம்ரித், நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு. முபாரக், குன்னூர் கோட்டாட்சியர் பூஷனகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஷ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார், தாசில்தார் காயத்திரி, கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com