search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரியில் 15-ந்தேதி  ரெயில் மறியல் போராட்டம்- கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அறிவிப்பு
    X

    களக்காட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    நாங்குநேரியில் 15-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம்- கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அறிவிப்பு

    • சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு கலந்து கொண்டு பேசினார்.
    • ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர்.

    களக்காடு:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் களக்காடு டி.கே.எஸ். மண்டபத்தில் மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தலைமை யில் நடந்தது. மாவட்ட பொருளாளர் டாக்டர் பால் ராஜ் முன்னிலை வகித்து வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் கேபிகே.ஜெயக்குமார், ராகுல்காந்தி எம்.பி.யின் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வருகிற 15-ந்தேதி நாங்குநேரியில் ரெயில் மறியல் போராட்டமும், வருகிற 20-ந்தேதி ஏர்வாடி யில் தலைமை தபால் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டமும் நடைபெறும் என்று அறிவித்தார்.

    தொடர்ந்து களக்காடு மெயின் ரோட்டில் காங்கிரஸ் தலைவர்கள் ஊர்வலமாக சென்று ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பொது மக்களிடம்துண்டு பிரசுரம் வழங்கினர்.பின்னர் காமராஜர், இந்திரா காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

    பின்னர் மாவடி சந்திப்பில் காமராஜர் படத் திற்கு மாலை அணிவித்து தண்ணீர் பந்தல் திறக்கப் பட்டது.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் குமார ராஜா, கிருஷ்ண குமார், தொகுதி பொறுப் பாளர் சசிகுமார், பொதுக் குழு உறுப்பினர் ஜார்ஜ், வள்ளியூர் யூனியன் துணை சேர்மன் வெங்கடேஷ் தனராஜ், மாவட்ட பொது செயலாளர்கள் செல்வராஜ், ஆறுமுகம், பொறியாளர் அணி தலைவர் தர்மலிங்கம், வட்டார தலைவர்கள் முருகன், அருள்தாஸ், முத்து கிருஷ்ணன், பாலசுப்பிர மணியன், பிராங் கிளின், ராமச்சந்திரன், நகர தலை வர்கள், களக்காடு ஜெபஸ்டின் ராஜ், சுடலைக்கண்ணு, பொன் ராஜ், அபுபக்கர்,

    ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் மருதூர்-மணிமாறன், சுரேஷ்பாபு, ராஜாபுதூர் காமராஜ், களக்காடு கவுன்சிலர் சின்சான் துரை, களக்காடு பால்சால மோன், முத்துக் குட்டி, செல்வராஜ், மேல பெத்த செல்வராஜ் விக்டர், பிரேம் ராஜ்குமார், வாசு, முன்னாள் நகர தலைவர் சேகர், ஜெயபாண்டி, பொன்ராஜ், மனித உரிமை பிரிவு அந்தோணிராஜ், ராபர்ட் சுஜின், மாவடி செல்லப்பாண்டி ஜான்சன், ராபின் டோனாவூர்.. ஜெயக்குமார், நவநீதன், மனோகரன், ரமேஷ். ஐசக் அற்புதராஜ், கோசல்ராம், வில்லுப்பாட்டு முத்து, மகளிர் காங்கிரஸ் பிரியா, முருகன், அன்ன கவுரி, ஜெபசுதா மற்றும் களக்காடு நகராட்சி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் களக்காடு இந்திரா காந்தி சிலைகள் மாவடி பஸ் நிறுத்தம் அருகிலும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மோர் பந்தல் மாவட்டத் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமையில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு திறந்து வைத்தார்.

    Next Story
    ×