ஏற்காடு கோடைவிழா- பனிமூட்டத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.ஏற்காட்டில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது.
ஏற்காடு கோடைவிழா- பனிமூட்டத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
Published on

ஏற்காடு:

ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி 3-வது நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை காண திரண்டு வந்தனர்.

தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து சீதோசன நிலை மிகவும் குளுமையாக மாறி உள்ளது.

இதனால் ஏற்காட்டில் குளிர் அதிகமாக காணப்படுகிறது தற்போது கோடை விழா மலர் கண்காட்சி நடைபெற்று வருவதால் இந்தகால சூழ்நிலையை இங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.

பூத்துக் குலுங்க மலர்களையும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள உருவங்களையும் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். ஏற்காட்டில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. சுற்றுலா பயணிகள் பனிமூட்டத்தை போட்டோ எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com