search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாரல் மழையுடன் இதமான சீதோஷ்ணம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
    X

    உற்சாகமாக படகுசவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்

    சாரல் மழையுடன் இதமான சீதோஷ்ணம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

    • மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சாரல்மழையுடன் இதமான வெயிலும் அடித்தது. இந்த வித்தியாசமான சீதோஷ்ணத்தை சுற்றுலா பயணிகள் அனுபவித்து உற்சாகமாக வலம் வந்தனர்.
    • நீண்டநாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு அதிகரித்ததால் சிறுவியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த வார தொடக்கத்தில் கனமழை பெய்ததால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது. மேலும் கனமழைக்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமானது. இதனால் சுற்றுலா பயணிகள் குறைவாகவே இருந்தது.

    இந்தநிலையில் வார இறுதி நாட்களில் சாரல் மழையுடன் இதமான சீேதாஷ்ணம் நிலவி வருகிறது. இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சாரல்மழையுடன் இதமான வெயிலும் அடித்தது. இந்த வித்தியாசமான சீதோஷ்ணத்தைசுற்றுலா பயணிகள் அனுபவித்து உற்சாகமாக வலம் வந்தனர்.

    குறிப்பாக கேரளாவில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்தனர். இங்குள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக், வெள்ளிநீர்வீழ்ச்சி, குணாகுகை, மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட், தூண்பாறை உள்ளிட்ட இடங்களை கண்டுரசித்தனர்.

    மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகுசவாரியும், ஏரிச்சாலையில் உற்சாகமாக சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். நீண்டநாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு அதிகரித்ததால் சிறுவியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×