search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
    X

    கோப்பு படம்

    சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

    • மாணவி பலியான நிலையில் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்தனர்.
    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேகமலை, ஹைவேவிஸ் வனப்பகுதி யில் பெய்யும் மழைநீர் சுருளிஅருவிக்கு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுருளி அருவிக்கு குளிக்க வந்த சென்னை மாணவி மீது மரக்கிளை முறிந்துவிழுந்து பலி யானார்.

    இதனால் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்தனர். தற்போது மரக்கிளைகள் அகற்றப்ப ட்டன. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கினர். கோடைவெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணி கள் சுருளிஅருவியில் உற்சா கமாக குளித்து மகிழ்ந்தனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 118.05 அடியாக உள்ளது. வருகிற 100கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 53.02 அடியாக உள்ளது. 33 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42.05 அடியாக உள்ளது. 4 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.75 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 1.6, தேக்கடி 7.4, போடி 5.2, சோத்து ப்பாறை 1.5 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×