search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் சுற்றுலா
    X

    தஞ்சை மாவட்டத்தில் அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் சுற்றுலா

    • பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடிஅம்மன் தொகுப்பு சுற்றுலா கடந்த 17-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.
    • இந்த சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு முறையில் தரிசனம் செய்யும்வகையில் உடனடி விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் வழிக்காட்டுதலி ன்படி சுற்றுலாத்துறை மேம்படுத்தபல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து ஆன்மீக பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடிஅம்மன் தொகுப்பு சுற்றுலா கடந்த 17-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.

    தஞ்சை வராகிஅம்மன், பங்காரு காமாட்சி அம்மன், புன்னைநல்லூர் மாரியம்மன், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, பட்டீஸ்வரம் துர்கை அம்மன் , வலங்கைமான் பாடைகட்டி மகாமாரியம்மன், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கும்பகோணம் ஆதி கும்பே ஸ்வரர்ம ங்களாம்பிகை , கும்பகோணம் காசி விஸ்வநாதர் விசாலாட்சி மகாமக குளம்,தாராசுரம் ஐராதீஸ்வரர் (பெரிய நாயகி அம்மன்) ஆகிய கோவில்களை கண்டு தரிசனம் செய்து வரும்வ கையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இந்த சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு முறையில் தரிசனம் செய்யும்வகையில் உடனடிவிரைவுதரிசனம் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. இச்சுற்றுலா விற்கான கட்டணம் ரூ.900 ஆகும்.

    எனவே சுற்றுலா பயணிகள் ஆன்மீக அன்பர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இந்த சுற்றுலாவிற்கு www.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 9176995832, 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா த்துறை அலுவலர்நெல்சன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×