search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில், இன்று ஒருங்கிணைந்த  ேளாண்மை   வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
    X

    சேலம் மாவட்டத்தில், இன்று ஒருங்கிணைந்த ேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்

    சேலம் மாவட்டத்தில், இன்று ஒருங்கிணைந்த ேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டம் சேலம் மாவட்டத்தில் 86 கிராம பஞ்சாயத்துகளின் செயல்படுத்தப்படுகிறது.

    இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியி–யல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதைச்–சான்று மற்றும் அங்கச் சான்று துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பால்–வளத்–துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நீர்வள ஆதாரத்துறை, மின்சார வாரியம், பட்டு வளர்ச்சித்துறை, கதர் கிராம தொழில் வாரியம், வணிக வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகள் சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து 86 பஞ்சா–யத்துகளிலும் மீண்டும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று முகாம் நடைபெற்றது.

    முகாமில் பட்டா மற்றும் சிட்டா வழங்குதல், உழவர் கடன் அட்டை விண்ணப்–பங்கள் பெறுதல், தகுதியுள்ள விவசாயிகளிடம் பி.எம்.கிசான் விண்ணப்பங்கள் பெறுதல், வண்டல் மண் எடுக்க விண்ணப்பங்கள் பெறுதல், பயிர்க்கடன், கால்நடை கடன் விண்ணப்பங்கள் பெறுதல், பயிர் காப்பீடு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கால்நடை–களுக்கு செயற்கை கருவூட்டல், மண் மாதிரி சேகரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முகாம் பணிகளை மாவட்ட வேளாண்மை அலுவலர் கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    Next Story
    ×