search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் சாருஸ்ரீ திடீர் ஆய்வு
    X

    திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் சாருஸ்ரீ திடீர் ஆய்வு

    • திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைந்துள்ள இ-சேவை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • திருவாரூர் பெண்கள் கிளை சிறைசாலையினை பார்வையிட்டு உணவு, கைதிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைந்துள்ள இ-சேவை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தினந்தோறும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.

    இ-சேவைமையத்திற்கு வருகை புரிந்தவர்களிடம் மையத்தில் வழங்கப்ப டும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இ-சேவை மைய ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு தேவையான பணிகளை உடனடியாக செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.

    வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சமூக பாதுகாப்புதிட்டம், வட்டவழங்கல் அலுவலகம், தனி தாசில்தார், நகர நிலவரி திட்ட அலுவலகம் ஆகிய அலுவலகங்களை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை உடனடியாக வழங்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, திருவாரூர் பெண்கள் கிளை சிறைசாலையினை பார்வையிட்டு அங்கு கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, கைதிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

    ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×