என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை மாணவர்கள் வெண்கல பதக்கம் வென்று சாதனை
    X

    திருவண்ணாமலை மாணவர்கள் வெண்கல பதக்கம் வென்று சாதனை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேசிய அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது
    • வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்

    தண்டராம்பட்டு:

    தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் திருவண்ணாமலை மாணவர்கள் வெண்கல பதக்கம் என்று சாதனை புரிந்தனர். அவர்களை மாநில கைப்பந்து சங்க துணை தலைவர் இரா. ஸ்ரீதரன் வாழ்த்தினார்.

    44 வது தேசிய அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திருச்சியில் கடந்த மாதம் 26,27,28,29,30 ஆகிய நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கைப்பந்து அணியில் திருவண்ணாமலை மாவட்டம் கைப்பந்து சார்பாக கலந்து கொண்டு விளையாடிய திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் ஆர். ஆகாஷ் மற்றும் சண்முகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவன் மகேஷ் சர்மா ஆகியோர் வெண்கலம் பதக்கத்தை வென்று சாதனை படைத்தனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை தமிழ்நாடு கைப்பந்து சங்கம் மாநில துணை தலைவரும் திருவண்ணாமலை மாவட்ட கைப்பந்து சங்கம் தலைவருமான இரா. ஸ்ரீதரனிடம் வாழ்த்துப் பெற்றனர்.

    நிகழ்ச்சியின் போது திருவண்ணாமலை மாவட்ட கூடைப்பந்து செயலாளர் ரமேஷ் திருவண்ணாமலை மாவட்ட கோ கோ சங்க செயலாளர் ஆனந்தன் திருவண்ணாமலை மாவட்ட கைப்பந்து செயலாளர் ஏ.கமல்ராஜ், சங்க பொருளாளர் பி.தண்டாயுதபாணி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×