search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலையில் நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு
    X

    திருவண்ணாமலையில் நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு

    • 30,948 பேர் எழுதுகின்றனர்
    • பறக்கும் படை அமைத்து கண்கானிப்பு

    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம்.

    இதில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ ர்களுக்கு பருவ தேர்வாகவும், 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வாகவும் நடைபெறுகிறது.

    பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையின் படி பிளஸ்-2 மாணவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரையும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி வரையும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை தொடங்க உள்ள பிளஸ்-2 மாணவர்களுக்கான தேர்வில் 15 ஆயிரத்து 467 மாணவர்களும், 15 ஆயிரத்து 481 மாணவிகளும் என 30 ஆயிரத்து 948 பேரும் எழுதுகின்றனர்.

    இந்த தேர்விற்காக மாவட்டத்தில் 130 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களில் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. இதில் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளை வாசிக்க வழக்கப்படும்.

    இந்த தேர்வை மாணவர்கள் எந்தவித அச்சமும், பதற்றமும் இல்லாமல் எழுத வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதேபோல் பிளஸ்-1 தேர்வை 13 ஆயிரத்து 463 மாணவர்களும், 14 ஆயிரத்து 246 மாணவிகளும் என 27 ஆயிரத்து 709 பேரும் எழுதுகின்றனர். 10-ம் வகுப்பு தேர்வை 15 ஆயிரத்து 302 மாணவர்களும், 14 ஆயிரத்து 621 மாணவிகளும் என 29 ஆயிரத்து 923 பேரும் எழுதுகின்றனர். பறக்கும் படை அமைத்து கண்காணிக்கின்றனர்.

    Next Story
    ×