search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் போலீஸ் திடீர் சாவு
    X

    பெண் போலீஸ் திடீர் சாவு

    • கருச்சிதைவு ஏற்பட்டு மயங்கி விழுந்து பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே அனந்தபுரம் ஊராட்சி மேல்வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி ஜான்சிராணி (வயது 30). இவர்களுக்கு யாஷிகா (4) என்ற மகள் உள்ளார்.

    ஜான்சிராணி சென்னை அம்பத்தூரில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.

    சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது கருச்சிதைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    பின்னர் அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ் பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தரணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×