வந்தவாசியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
Published on

வந்தவாசி:

தமிழகம் முழுவதும் ஒரு கோடி திமுக உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வந்தவாசி தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது இதன் ஒரு பகுதியாக வந்தவாசி நகரத்தில் மட்டும் 5,500 உறுப்பினர்கள் சேர்க்கைக்கான முகாம் தீயணைப்பு நிலையம் எதிரே நடந்தது நிகழ்ச்சிக்கு எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.சீதாபதி நகராட்சி தலைவர் எச்சலால், துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், முன்னாள் நகராட்சி தலைவர் எல்.அப்சர் லியாகத், முன்னாள் நகர செயலாளர் எஸ்.அன்சாரி, நகர அவை தலைவர் அ.நவாப் ஜான், முன்னாள் கவுன்சிலர் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அ.தயாளன் அனைவரையும் வரவேற்றார்.

இதில் உறுப்பினர் சேர்க்கும் முகாமினை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் டி.ராதா, கே.ஆர்.பழனி, மாவட்ட பிரதிநிதி எம்.டி.இப்ராகிம்சா, எம்.குடியரசு, இளைஞர் அணி நகர செயலாளர் கோமாதா சுரேஷ், கவுன்சிலர்கள் அன்பரசு, ஜெயபிரகாஷ், நூர் முஹம்மது, மருது சரவணகுமார், சந்தோஷ் குமார், முன்னாள் கவுன்சிலர்கள் வட்டச் செயலாளர்கள் சர்தார், ரவி, புருஷோத்தமன், ஜெகன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

முடிவில் துணைச் செயலாளர் டி.ராஜ்குமார் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com