10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

மாவட்டம் முழுவதும் தீவிர கள்ள சாராயம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் சாராய கும்பலை தேடும் பணி தீவிரம்
10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.கார்த்தி கேயன் உத்தரவுப்படி, மதுவிலக்கு அமலாக்க ப்பிரிவு டி.எஸ்.பி.ரமே ஷ்ராஜ் மேற்பார்வையில், மாவட்டம் முழுவதும் தீவிர கள்ள சாராயம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தானிப்பாடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தட்டரணை காட்டுப்பகுதி, தச்சம்பட்டு எல்லைக்குட்பட்ட மூஞ்சுராம்பட்டு மற்றும் ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தும்பக்காடு தன்னீர்பாரை ஆகிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்து 350 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் சுமார் 170 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.

மேலும் தலைமறைவாகி உள்ள சாராய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com