search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தொடக்கம்
    X

    கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தொடக்கம்

    • ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்
    • அதிகாரி தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கங்கள்- கூட்டுறவு வங்கிகளில் வேலை வாய்ப்புக்கு முக்கிய கல்வித்தகுதியான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி (முழுநேரம்) வகுப்புக்கான சேர்க்கை விண்ணப்பம் பெறுவதற்கு 29.07.2022 முதல் 18.08.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரில் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 22-ந்தேதி அன்று மாலை 5.30 மணிக்குள் இணைப்புகளுடன் மீள சமர்ப்பிக்கலாம்.

    மாணவ, மாணவிகள் கேர்க்கைக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி மேல்நிலைப்பள்ளி (+2) (10 + 2 முறையில்) தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் +2 தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளும் (10 + 2 + 3) விண்ணப்பிக்கலாம்.

    பயிற்சியில் சேருவதற்கு 1-ந்தேதியன்று அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்.

    1 வருட காலத்தில் 2 பருவ முறையில் நடைபெறவிருக்கும் இப்பயிற்சியின் முடிவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யக்கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டய சான்றிதழ், கணினி பயிற்சி சான்றிதழ் மற்றும் நகை மதிப்பீடு சான்றிதழ் ஆகிய மூன்று சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    பயிற்சிக் கட்டணம்

    இப்பயிற்சியில் சேர பயிற்சிக்கட்டணம் ரூ.18,850 பூர்த்தி பட்ட விண்ணப்பங்களை திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம், 204, திண்டிவனம் சாலை, கீழ்நாச்சிப்பட்டு அஞ்சல், திருவண்ணாமலை, தொலைபேசி எண். 04175 - 254793 என்ற முகவரிக்கு கூரியர்- பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என தெரி வித்துகொள்ளப்படுகிறது.

    Next Story
    ×