என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சைக்கிள் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
    X

    சைக்கிள் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

    • 10 பவுன் நகை, பணம் திருடி சென்றனர்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராமம் ரோடு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அருகில் உள்ள நட்சத்திர கோவில் அருகில் சைக்கிள் ஷாப் நடத்தி வருகிறார்.

    திருட்டு

    இவர் நேற்று குடும்பத்துடன் வீட்டை பூட்டிக்கொண்டு திருவண்ணாமலைக்கு துணி எடுப்பதற்காக சென்றுள்ளார்.

    மீண்டும் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் மெயின் கேட் பூட்டப்பட்டு இருந்த நிலையில் வீட்டில் பக்கவாட்டில் உள்ள மாடி படியின் வழியாக உள்ளே வந்து மற்றொரு கேட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளதாக கலசப்பாக்கம் போலீசில் ரமேஷ் புகார் அளித்துள்ளார்.

    விசாரணை

    இதன் பேரில் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டம் பகலிலேயே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×