என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
    X

    கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

    • போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
    • மாணவியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட வழக்கில் தண்டனை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாணவியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    கூலி தொழிலாளி

    தண்டராம்பட்டு தாலுகா மலைமஞ்சனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 24). இவர் சென்னையில் கூலி தொழில் செய்து வந்தார். இவருடன் திருவண்ணாமலை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் வேலை செய்து வந்தார். ஆனந்தகுமார் திருவண்ணாமலையில் உள்ள அந்த நபரின் வீட்டிற்கு வரும் போது அவரது 15 வயது 10-ம் வகுப்பு படித்து கொண்டிருந்த மகளுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

    பின்னர் அவர் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி வலுகட்டாயமாக கடந்த சென்னைக்கு அழைத்து சென்று உள்ளார்.

    அங்கு அவர் மாணவியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு உள்ளார். இதற்கிடையில் மாணவியை காணவில்லை என்று அவரது பெற்றோர் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாயமான மாணவி சென்னையில் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மாணவியை மீட்டனர். மேலும் ஆனந்தகுமாரை கைது செய்தனர்.

    கோர்ட்டு தீர்ப்பு

    இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கில் மைதிலி ஆஜரானார். இந்த நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்து நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தகுமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். பின்னர் ஆனந்தகுமாரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×