search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் - வஞ்சிப்பாளையம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி  4 ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் - வஞ்சிப்பாளையம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி 4 ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்

    • பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 2 நாட்கள் 4 ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு செல்ல உள்ளது.
    • சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் - வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (வியாழக்கிழமை), நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் 4 ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு செல்ல உள்ளது. அதன்படி ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.13352) நாளை ஆலப்புழாவில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும். அதாவது 3 மணி நேரம் தாமதமாக புறப்படுகிறது.

    இதுபோல் எர்ணாகுளம் சந்திப்பு - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (12678) நாளை 2½ மணி நேரம் தாமதமாக எர்ணாகுளத்தில் இருந்து காலை 11.40 மணிக்கு புறப்படும். திருச்சி-பாலக்காடு டவுன் ரெயில் (16843) நாளை மறுநாள் திருச்சியில் இருந்து 2½ மணி நேரம் தாமதமாக மதியம் 3.30 மணிக்கு புறப்படும். நாகர்கோவில் - கோவை ரெயில் (16321) நாளை மறுநாள் நாகர்கோவிலில் 2 மணி நேரம் தாமதமாக காலை 9.35 மணிக்கு புறப்படும்.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×