பல்லடம் காளியம்மன் கோவிலில் யுகாதியையொட்டி தீர்த்த கலச ஊர்வலம்

மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்வது கடந்த பலநூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேளதாளத்துடன் ஊர்வ லமாக பச்சாபாளையம் மாகாளி அம்மன் கோவிலுக்கு, கொண்டு வரப்பட்டது.
தீர்த்தகலச ஊர்வலம் நடைபெற்ற காட்சி. 
தீர்த்தகலச ஊர்வலம் நடைபெற்ற காட்சி. 
Published on

பல்லடம் :

பல்லடம் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, அவிநாசி, கொடுமுடி, கோவை வெள்ளியங்கிரி மலை, உள்பட பல்வேறு புனித தலங்களிலிருந்து தீர்த்த கலசங்கள் முத்தரித்து கொண்டு வந்து மாகாளிய ம்மன், மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்வது கடந்த பலநூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வருடமும் யுகாதி பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த கலசங்கள் பல்லடம் மங்கலம் ரோடு ஆனந்த விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டு, பின்னர் மேளதாளத்துடன் ஊர்வ லமாக பச்சாபாளையம் மாகாளி அம்மன் கோவிலுக்கு, கொண்டு வரப்பட்டது.

பின்னர் தீர்த்த கலசங்களில் இருந்த தீர்த்தநீர் மாகாளியம்மன், மாரியம்மன் சாமிகளுக்கு ஊற்றி தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாகாளி யம்மன், மாரியம்மனை வழிபட்டனர். அனைவ ருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com