search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமுருகன் மெட்ரிக் பள்ளியில் பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்
    X

    பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணவர்களை படத்தில் காணலாம்.

    திருமுருகன் மெட்ரிக் பள்ளியில் பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்

    • மாணவர்களின் கல்வியில் பெற்றோரின் பங்கு இருக்க வேண்டும்.
    • 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி பூஜை செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு பாதபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி நிறுவனர் டாக்டர் ஜி.மோகன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும், முதல்வருமான சுதாமோகன் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியின் போது மாணவர்கள்- பெற்றோர்களுக்கு இடையேயான உறவின் மேன்மையை குறித்தும், மாணவர்களின் கல்வியில் பெற்றோரின் பங்கு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பது பற்றியும் தாளாளர் சுதாமோகன் சிறப்புரையாற்றினார்.

    400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி பெற்றோர்களின் பாதம் தொட்டு பூஜை செய்தனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×