search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திறன்மிகு விளையாட்டு வீரர்கள் - சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    • விண்ணப்பங்களை 30.11.2022 முதல் 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்பிக்கலாம்.
    • இணைய வழியில் வரும் விண்ணப்பங்களை தவிர பிறவிண்ணப்பங்கள் எக்காரணம்கொண்டும் ஏற்கப்படமாட்டாது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர்வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை 30.11.2022 முதல் 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்பிக்கலாம். ஏற்கனவே அஞ்சல் வழியில் நேரடியாக விண்ணப்பிருந்தாலும், மீண்டும் இணையவழியில்விண்ணப்பிக்க வேண்டும்.இணைய வழியில் வரும் விண்ணப்பங்களை தவிர பிறவிண்ணப்பங்கள் எக்காரணம்கொண்டும் ஏற்கப்படமாட்டாது.

    Next Story
    ×