search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி அருகே குடிநீர் தொட்டி பணியை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை
    X

    போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் பள்ளம் தோண்டி காட்சி.

    அவினாசி அருகே குடிநீர் தொட்டி பணியை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை

    • 1980 ஆம் ஆண்டு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது.
    • 20 அடி பாதையை மறைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் பள்ளம் தோண்டி உள்ளனர்.

    அவினாசி:

    அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சிப்பகுதியில் சாலையை மறைத்து கட்டப்பட உள்ள மேல்நிலை தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது;-

    கருவலூர் ஊராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் 1980 ஆம் ஆண்டு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது.அது மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அத்தொட்டி அகற்றப்பட்டது.

    ஆனால் தற்பொழுது அதே இடத்தில் 60 ஆயிரம் லிட்டர்கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள 20 அடி பாதையை மறைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் பள்ளம் தோண்டி உள்ளனர்.பொதுமக்கள் இது குறித்து கேட்டால்முறையாக பதில் தருவதில்லை.

    எனவே அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மேல்நிலை தொட்டி கட்டுவதை மாற்றி அண்ணா நகர் தெற்கு பகுதியில் புதிதாக உள்ள காலி இடத்தில் இந்த மேல்நிலைத் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×