பல்லடத்தில் இருந்து கோவைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

பல்லடத்தில் இருந்து கோவை செல்வதற்கு சாலை மார்க்கமாக மட்டுமே செல்ல முடியும். பல்லடம் வழியாக எங்கும் ரெயில் போக்குவரத்து இல்லை.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பல்லடம்:

பல்லடம் நகரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.விசைத்தறி மற்றும் கறிக்கோழி உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள் தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பல்லடத்தில் இருந்து கோவை செல்வதற்கு சாலை மார்க்கமாக மட்டுமே செல்ல முடியும்.

பல்லடம் வழியாக எங்கும் ரெயில் போக்குவரத்து இல்லை. இந்த நிலையில் காலை நேரங்களில், கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் என கோவைக்கு பஸ்களில் அதிகம் பேர் செல்கின்றனர். இந்த நிலையில், பல்லடம் வழியாக கோவை செல்லும் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

இதனால் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்கின்றனர். இதன் மூலம் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். எனவே காலை நேரங்களில் பல்லடத்தில் இருந்து கோவைக்கு கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com