அவினாசி சீனிவாசபுரம் மதுக்கடையை மூட பொதுமக்கள் கோரிக்கை

மது குடிப்பவர்கள் மது குடித்துவிட்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர். பள்ளி செல்லும் மாணவ மாணவியர் அந்த வழியாக சென்று வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அவினாசி:

தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனம் 5320 கடைகள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. அரசு விதிப்படி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறான பகுதியில் மதுக்கடைகளை அமைக்க கூடாது. ஆனால் பல இடங்களில் விதிக்கு முரண்பாடாக மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

அவ்வாறு திருப்பூர் மாவட்டம் அவினாசி கோவை மெயின் ரோட்டில் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள மதுக் கடையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது குறித்து தொகுதி எம்எல்ஏ.விடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.இருப்பினும் அந்த மது கடை செயல்பட்டு வருகிறது.

இது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அவிநாசி கோவை மெயின் ரோடு சீனிவாசபுரம் பகுதியில் நிறைய குடியிருப்புகள் வணிக வளாகங்கள் உள்ளன. பள்ளி செல்லும் மாணவ மாணவியர் அந்த வழியாக சென்று வருகின்றனர் .விளிம்பிலேயே கடை இருப்பதால் மது குடிப்பவர்கள் ரோட்டில் நின்று கொண்டு அங்கேயே மது குடித்துவிட்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

போதை அதிகமான நிலையில் ஆங்காங்கே ரோட்டிலேயே படுத்து கிடக்கின்றனர். இதனால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது.போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள அந்த மதுபான கடையை மூடாமல் அதே பகுதியில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் எந்த விதமான இடையூறும் இல்லாத ஒதுக்கு புறமான இடத்தில் செயல்பட்டு வந்த மதுபான கடை மூடப்பட்டுள்ளது. மேலும் பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கும் பணத்தில் இருந்து தங்களுக்கு கமிஷன் வராத கடைகளை அதிகாரிகள் மூடி உள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com