அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இஸ்லாமியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள். 
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள். 
Published on

திருப்பூர் :

அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சிறுபான்மை மக்களுக்கான வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகம் முன்பாக 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com